தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டை போல கர்நாடகாவிலும் இருமொழி கல்வி மட்டுமே அவசியம்: மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சீரான கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கைக்கு பதிலாக இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை மட்டும் தான் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதே போல் கர்நாடகாவிலும் இருமொழிக்கொள்கையை மட்டும் கடைபிடிக்க மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு: கர்நாடகாவில் கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக பேராசிரியர் சுக்தேவ் தோராட் தலைமையில் கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையத்தை கடந்த 2023 அக்டோபர் 11ம் தேதி மாநில அரசு அமைத்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் இறுதி அறிக்கையை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சுக்தேவ் தோராட் வழங்கினார்.

கல்வி சீர்திருத்த ஆணையம் வழங்கியுள்ள சிபாரிசில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கன்னடம் தாய்மொழியாக கற்பிக்க வேண்டும். முக்கிய சிபாரிசாக மாநிலத்தில் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கையை தவிர்த்து கன்னடம்,ஆங்கிலம் ஆகிய இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும். மாநில அரசு பள்ளிகளின் கல்வி தரம் கேந்திரிய வித்யாலயாக்களின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை செய்துள்ளது.

Related News