தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரிமங்கலம் அருகே சொந்த நிதியில் உபரிநீர் கால்வாயை தூர்வாரிய பொதுமக்கள்

காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே பொதுமக்கள் தங்களது சொந்த நிதியின் மூலம் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி அணை உபரிநீர், பூலாப்பட்டி ஆறு மற்றும் கால்வாய் மூலம், ஜம்பேரி உள்பட 10 ஏரிகளுக்கு செல்கிறது. இந்த ஏரியின் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்தும் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

தற்போது, தொடர் மழை காரணமாக தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் பூலாப்பட்டி ஆற்றில் திறந்து விடும் சூழ்நிலையில், உபரிநீர் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரிகளுக்கு சீரான முறையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் புகும் அபாயம் உள்ளதால், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த கோவிலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சென்னகேசவன் தலைமையில் மொளப்பனஅள்ளியை சேர்ந்த விவசாயிகள் சக்திவேல், நாகராஜ், ஆறுமுகம், முருகன், அன்பு ராஜலிங்கம், ராஜா, பச்சையப்பன், விக்ரம், செந்தில்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள், தங்களது சொந்த நிதியின் மூலம் பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலத்தில் இருந்து, ஜம்பேரி ஏரி வரை கால்வாயில் படர்ந்திருந்த முட்புதர்கள் செடி, கொடிகள் ஆகியவற்றை அகற்றினர்.

Advertisement

Related News