தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் 839 மனுக்கள் வந்தன

*உரிமை தொகை கேட்டு 179 மகளிர் விண்ணப்பம்

Advertisement

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் 839 மனுக்கள் வந்தன. உரிமை தொகை கேட்டு மட்டும் 179 மகளிர் விண்ணப்பம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மலையூர் கிராமத்தில் உள்ள தனியார் மஹாலில் அரசு அறிவிப்பின்படி தமிழக முதல்வர் உத்தரவின்படி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிரான் விடுதி, வெள்ளாள விடுதி, வலங்கொண்டான் விடுதி, கருப்பட்டிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் நலன் பெறும் வகையில் நடைபெற்ற இந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமிற்கு புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ தலைமை வகித்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமிற்கு கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவபாஞ்சாலன் வரவேற்றார். மேலும் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரவி, கறம்பக்குடி தாலுகா தாசில்தார் ஜமுனா மற்றும் ஒன்றிய ஆணையர் நல தேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் செந்தில்குமார், தாலுக்கா தலைமையிடத்து துணை சிறப்பு தாசில்தார் பெரியநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 4 ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 839 மனுக்கள் வரப்பெற்றன. மகளிர் உரிமைத்தொகை கேட்டு மட்டும் 179 மனுக்கள் வந்தன.

குறிப்பாக பட்டா மாறுதல், கலைஞர் வீடு கட்டுதல், இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, 100 நாள் அட்டை என 87 மனுக்களுக்கு மேடையிலேயே தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பாக பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்திற்கும் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு 45 நாட்களுக்குள் உடனடியாக தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News