தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரம்பாக்கத்தில் இன்று 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பூந்தமல்லி: தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னை மாவட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, இன்று காலை போரூர் அருகே காரம்பாக்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வரவேற்றார். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Advertisement

இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இங்கு 1600 பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா விழாவில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருக்க இடம், பட்டாவுடன் வீட்டுடன் கூடிய இடம் கிடைப்பதில் சவாலாக உள்ளது. பட்டா என்பது, உங்களின் உரிமை. உங்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். இன்று, உங்களுக்கு உறுதியளிக்க நாங்கள் இங்கே இருக்கிறோம். உங்களுக்கு பட்டா கிடைத்திருப்பதால் இன்றிரவு நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

நமது சுற்றுப்புறங்கள் வளரும்போது, மக்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில், கடந்தாண்டு அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் 1.40 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 19 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அரசை தேடி மக்கள் வரவேண்டிய நிலை மாறி, மக்களை தேடி அரசு வரவேண்டும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு துணையாக அரசு இருக்கும். அதேபோல் எங்களுக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement