தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரைக்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

*ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்

Advertisement

சேந்தமங்கலம் :புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.

புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.

முகாமில் காரைக்குறிச்சிபுதூர், காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு பெயர் மாற்றம், நிலம் அளவீடு செய்தல், புதிய குடிநீர் குழாய், கலைஞர் கனவு இல்லம் வீடு, விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

உடனடியாக மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வட்டார அட்மா குழு துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் தாசில்தார் மோகன்ராஜ், வட்டார அட்மா குழு தலைவர் கௌதம், வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, துணை வேளாண் அலுவலர் கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement