தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரைக்குடியில் பரபரப்பு மதுரை வியாபாரியை கடத்தி 1.50 கிலோ நகைகள் கொள்ளை

காரைக்குடி : மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா(40). தங்க நகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ பழைய தங்க நகைகளை வைத்திருந்தார். அப்போது, மர்மநபர்கள் காரில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென விஜயராஜாவை இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

பின்னர், அவரிடம் இருந்த நகைப்பையை பறித்துக் கொண்டனர். தொடர்ந்து காரைக்குடியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள திருமயத்தில் அவரை இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து விஜயராஜா அங்கிருந்து பஸ்சில் காரைக்குடி வந்தடைந்தார். பின்னர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஷ் புனியா, தேவகோட்டை டிஎஸ்பி கவுதம், சிவகங்கை ஏடிஎஸ்பி பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதி சாலைகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.