கன்னியாகுமரி களைகட்டியது; கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
Advertisement
இந்தநிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். சுற்றிப்பார்க்க வந்தவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.சில சுற்றுலா பயணிகள் பிற இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு படகில் சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது.
Advertisement