தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வாகன சோதனையின்போது கேரளாவிற்கு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி சுனாமி காலனி வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தினர்.

Advertisement

இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில் மூடை, மூடைகளாக ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டி வந்தது களியக்காவிளையை சேர்ந்த சாமி மகன் வினு (49) என்பதும், அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் கன்னியாகுமரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி காரில் கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வினுவை கைது செய்த போலீசார் காருடன் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் உணவு பொருட்கள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாகன சோதனையின்போது ஒரு டன் ரேஷன் அரிசி பிடிபட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News