தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தா படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: காந்தா படத்துக்கு தடை கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனும், தமிழ்நாடு அரசின் இணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 69 வயதான தியாகராஜன் ஆகிய இருவரும் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் தனது மனுவில், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு காந்தா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் காந்தா. இந்த படம் தனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 14ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement

மேலும், பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்றால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றியிருந்தாலும் மக்கள் நினைவுகூற முடியும். அடிப்படை ஆதாரமில்லாத அவதூறாக தயாரிக்கப்பட்ட காந்தா படத்தை வெளியிட தடை கோரி அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்த போது, நவம்பர் 18ம் தேதிக்குள் மனுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் துல்கர் சல்மானுக்கு, படம் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement