காங்கயம் அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி தம்பதி, மகள் பலி
Advertisement
கடந்த 10 நாட்களுக்கு முன் கேரளாவில் உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென்ற இவர்கள், நேற்று அதிகாலை 3 மணிக்கு கேரளாவில் இருந்து காரில் அரச்சலூர் திரும்பினர். காங்கயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த ராஜா, மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமி ஹித்ரா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மெளனா ஷெரின் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement