தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தசஷ்டி திருவிழா 2வது நாளில் நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

*திரளான பக்தர்கள் தரிசனம்

Advertisement

நெல்லை : நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், சந்திப்பு சாலை குமரன் கோயில், டவுன் வேணுவன குமாரர் கோயில்,நெல்லையப்பர் ஆறுமுகர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களின் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.

இதைத் தொடர்ந்து 2வது நாளான நேற்று காலையில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சாலை குமரன் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், டவுன் வேணுவன குமாரர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு ஹோமங்கள், மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில், சாலை சுப்பிரமணியர் கோ யில், பாளை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, குறிச்சி சொக்கநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, பாளை மேலவாசல் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா அக்.22ம்தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் இரவு 7 மணிக்குமேல் ஸ்ரீ சண்முகருக்கு திரி சதி அர்ச்சனையும் நடந்து வருகிறது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் வரும் 27ம்தேதி திங்கட்கிழமை மாலை நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு மேல் கல்யாண சுப்பிரமணியருக்கும், உற்சவருக்கும் 27 வகையான அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மேல் சிவன்கோயில் தெற்குத்தெரு, பழைய மதுரை பிரதான சாலை, பெருமாள் கோயில் அருகே, வேதமூர்த்தி- மந்திரமூர்த்தி இரட்டை விநாயகர் கோயில் வடக்கு பகுதி என 4 இடங்களில் அடுத்தடுத்து சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் (28ம் தேதி) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு மேல் வள்ளி- தெய்வானை சுப்பிரமணியர் திருக்கல்யாணமும், தொடர்ந்து சிறப்பு விருந்தோம்பலும் நடைபெறுகிறது.

Advertisement

Related News