தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி குடும்ப வாரிசு அல்ல அண்ணாவின் வாரிசு: காசிமுத்து மாணிக்கம் பேச்சு

சென்னை: காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி குடும்ப வாரிசு அல்ல, அண்ணாவின் வாரிசு, திமுகவின் வாரிசு என நிரூபித்திருக்கிறார் என வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கூறினார். சென்னை, கலைஞர் நகர் தெற்கில் திமுக இளைஞர் அணி பாக முகவர்கள், வட்ட நிர்வாகிகள் கூட்டம் பகுதி அமைப்பாளர் தினேஷ் தலைமையில் நடந்தது. இதில் பேராசிரியர் சுபவீரபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், எம்எல்ஏ பிரபாகர ராஜா, பகுதி செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

Advertisement

தொடர்ந்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: தமிழகத்தில் தேர்தல் பணி தொடங்கப்பட்டு விட்டது. தளபதி தலைமை கழகத்தில் கழக தோழர்களை தொகுதி, தொகுதியாக பார்த்து வருகிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஊர் ஊராக சென்று உதயசூரியனுக்கு வாக்கு கேட்டிட தொகுதி, தொகுதியாக கழக தோழர்களை உற்சாகம் தந்திட தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த தொடங்கிவிட்டார், முதல் தொகுதி கூட்டம் காஞ்சிபுரம். அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தான் தொடங்கினார்.

தனது சுற்றுப்பயணத்தை 234 தொகுதியிலும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து அந்த பெட்டிசனில் சிலவற்றை மேடையிலேயே படித்து விசாரணை நடத்தி, ஆறுதலும், விடிவும் காணும் தனது புதிய திட்டத்திற்கான தொடக்க தொகுதியாக அண்ணாவின் தொகுதியான காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி தான் குடும்ப வாரிசு அல்ல, அண்ணாவின் வாரிசு, திமுகவின் வாரிசு என நிரூபித்திருக்கிறார். எடப்பாடி, அதிமுக குடும்ப அரசியலை தகர்க்கும் என்கிறார். ஜெயக்குமார் மகன், ராஜன் செல்லப்பா மகன் எம்.பி.க்கு நிற்கலாம், ஓ.பி.எஸ். மகன் எம்.பி ஆனது அதிமுகவில் தானே. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement