தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம், மதுரை தொழில் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 40 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 பூங்காக்களை 21,404 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்கும் பணிகள் நடக்கிகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் அருகில் 422.33 ஏக்கர் பரப்பளவில் ரூ.530 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது.

Advertisement

இதன் மூலம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 278.26 ஏக்கர் பரப்பளவில் ரூ.68 கோடி மதிப்பில் மற்றொரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த 2 புதிய தொழில்பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement