தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் வேர்களை தேடி திட்டம்: 95 அயலக தமிழ் இளைஞர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில், வேர்களை தேடி திட்டத்தின் கீழ் கலை மற்றும் கலாச்சாரத்தினை அயலக தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையில், 14 நாடுகளை சார்ந்த 95 அயலக தமிழ் இளைஞர்கள், நேற்று முன்தினம் சுற்றுலா பயணமாக காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூரில் உள்ள அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பட்டு கைத்தறி நெசவாளர்களுடன் கலந்துரையாடி, பட்டு சேலைகள் நெசவு செய்யும் முறை குறித்து கேட்டறிந்தார்கள். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், சுற்றுலாத்துறை சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இப்பயணத்தில், பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சப்-கலெக்டர் ஆஷிக் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பாரதி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு, அரசு அலுவலர்கள், பட்டு நெசவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News