தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இருக்கக்கூடிய குணகரம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஆறு சென்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலையங்கள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

Advertisement

அந்த வகையில் பரந்தூர் சுற்றுவட்டார ஏரியில் இருந்து வெளியேறிவரக்கூடிய உபரி நீர்கள் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றுக்கு இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. அங்கு சுற்றியிருக்கக்கூடிய கோட்டூர், எடையார்பாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உபரி நீர் அதிகளவில் செல்வதால் குணகரம்பாக்கம் தரைப்பாலத்தில் மேல் 2 அடிக்கு வெள்ளநீர் சென்று வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக கட்சி அளிக்கிறது. ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யது வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து துண்டித்து மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News