தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்

 

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த செம்மல் கடந்த செப்டம்பரில் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்டது. தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து டிஎஸ்பியை கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை இல்லை எனக் கூறி டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். நீதிபதிக்கும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்குமான பிரச்சினையால் கைது உத்தரவு என காவல் துறை வழக்கு தொடர்ந்தது. டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். டிஎஸ்பியை கைது செய்ய நீதிபதி செம்மல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தனிப்பட்ட விரோதத்தில் உத்தரவு பிறப்பித்த புகாரில் விசாரணை முடிந்த நிலையில், செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணைக்குப்பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement