தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கருவேப்பம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி சசிகலா (38). கட்டுமான தொழில் செய்துவருகிறார். இவர்களுக்கு திவானி (5) என்ற பெண் குழந்தை, லாதூகான் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர். ஆனந்தபாபு, கருவேப்பம்பூண்டி பால்வாடித்தெரு பிள்ளையார் கோயில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறையாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருவேப்பம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், சசிகலா-ஆனந்தபாபு தம்பதி வசிக்கும் இடம் தன்னுடைய இடம் என்றும், இதற்கான பட்டா தன்னிடம் உள்ளது என கூறி அவர்களை வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக சசிகலா-ஆனந்தபாபு தம்பதி, கலெக்டர், வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்துள்ளனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் நேற்று மக்கள் நல்லுறவு மையத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் சசிகலா சென்றுள்ளார். பின்னர், நல்லுறவு மைய அரங்கத்தின் பின்பக்க கதவு அருகில் திடீரென தனது உடலிலும் குழந்தைகள் மீதும் தயாராக கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் சோதனையை மீறி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement