கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் சரமாரி வெட்டிக்கொலை: கொடுக்கல் வாங்கல் தகராறில் கும்பல் அட்டகாசம்
Advertisement
இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். தகவல் அறிந்த கமுதி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கண்ணன் ஆசிரியர் பணியுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இதில் தொழில் போட்டி மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Advertisement