தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் சரமாரி வெட்டிக்கொலை: கொடுக்கல் வாங்கல் தகராறில் கும்பல் அட்டகாசம்

கமுதி: கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அருகேயுள்ள கே.பாப்பாங்குளம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி நேற்று துவங்கப்பட்டது. இதையடுத்து, டூவீலரில் கே.பாப்பாங்குளம் பள்ளிக்கு கண்ணன் நேற்று காலை சென்று கொண்டிருந்தார். பாப்பாங்குளம் விலக்கு சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் திடீரென அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். தகவல் அறிந்த கமுதி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கண்ணன் ஆசிரியர் பணியுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இதில் தொழில் போட்டி மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement