தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமுதி அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 51 கிடாக்களை பலி கொடுத்து 5 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து

கமுதி : கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழாவில், 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராம எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில், ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறும்.

Advertisement

இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி மண்ணெடுத்து பீடம் அமைத்தனர். பின்னர் மாலை அணிவித்து பொங்கல் வைத்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, 51 கிடாக்களை பலி கொடுத்தனர்.

தயார் செய்த சாதத்தை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு, நேற்று காலை சாத உருண்டை மற்றும் கறி விருந்து ஆண்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இங்குள்ள எந்தப் பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைப் பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று கறி விருந்து சாப்பிட்டு சென்றனர்.

Advertisement