தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்த உணவு திருவிழா: மாணவர்கள் 200 வகையான உணவுகளை சமைத்து அசத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு திருவிழா விமர்சியாக நடைபெற்றது. கமுதி அருகே உள்ள இந்த கல்லூரியில் சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு மாணவர்கள் விறகு அடுப்பில் சமைத்த உணவுகளை கொண்டு உணவு திருவிழா நடத்தப்பட்டது. மாணவர்கள் 25 குழுக்களாக இணைந்து பாரம்பரிய முறையில் இட்லி, குழாய் புட்டு, இலை கொழுக்கட்டை, அப்பம், போலி, திருநெல்வேலி அல்வா, சிக்கன் பிரியாணி, ஆப்பம், நேந்திரபழம் பாயாசம் உள்ளிட்ட 200 வகையான உணவுகளை தயாரித்து இருந்தனர்.
Advertisement

இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் தயாரித்து விற்பனை செய்த உணவுகளை வாங்கி சுவைத்தனர். பெற்றோரிடம் கேட்டறிந்து மாணவர்கள் பலவித உணவுகளை சமைத்து இருந்தது பார்வையாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. உணவு திருவிழாவை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களின் பரதநாட்டியம், புலி ஆட்டம், காவடி உள்ளிட்ட நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுவும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. விழா முடிவில் மாணவ குழுக்கள் தயாரித்த உணவு வகைகளின் சுவை மற்றும் தயாரிப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement