தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் உலக புலிகள் தின விழிப்புணர்வு

கம்பம் : கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் உலக புலிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பூமியின் பசுமை வளங்களை சுமக்கின்ற வனங்களும், அதன் நிலைமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உயிரினங்களும், குறிப்பாக புலிகள், இன்று பலவிதமான ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் பசுமை பரப்பையும், புலிகளின் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், புலி முகமூடிகளை அணிந்து கொண்டு ஒரு புலி ஒரு வனத்தைக் காக்கும், ஒரு வனம் உலகத்தைக் காக்கும், விலங்குகளை அழிக்காதீர்கள், இயற்கை அழியும். பசுமையில்லை என்றால் புவியில்லை போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து புலிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் மலர்விழி, கேஜி ஆசிரியை உமாதேவி, பள்ளி அலுவலக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறந்த புலி வேடமாடல், சிறந்த ஓவியம், சிறந்த முழக்கம் ஆகியவற்றிற்கான சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.