தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சனாதனம் பற்றி பேசியதால் நடிகர் கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகர் ரவி மீது மநீம புகார்

சென்னை: சனாதனம் பற்றிய பேச்சுக்காக நடிகர் கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகரான ரவி(எ)ரவிச்சந்திரன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், சனாதானம் பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மவுரியா, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ் ஆகியோர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் பேசிய வீடியோவை நீக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் படி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள், சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் துணை நடிகர் ரவிச்சந்திரன் பேசிய வீடியோ பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News