கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக 2ம் அலகில், இன்று முதல் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 அலகுகளைக் கொண்ட இங்கு தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 8 ஆண்டுகளாக சரி செய்யப்படாததால் மின் உற்பத்தி அதில் நடக்கவே இல்லை. தற்போது 2ம் அலகிலும் பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement