தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்பாக்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அடுத்த பைராகிமடம்-அங்கமாம்பட்டு கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கான ரேஷன் கடை அங்கமாம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த ரேஷன் கடைக்கு இப்பகுதியில் உள்ள ஒரு சாலை வழியாக சென்று பொதுமக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
Advertisement

இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை, எனது நிலத்துக்கு செல்லும் பாதை என அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் கூறினார். இந்நிலையில், திடீரென அந்த சாலையை தடுத்து வேலி அமைத்தார். இதனால் பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் கல்பாக்கம்-திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழி சம்மந்தமாக உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News