தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றபோது சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; 2 பேர் பரிதாப சாவு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றபோது சைக்கிள் மீது டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (55). இவர், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் தங்கியிருந்தார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (47). சமையல் வேலை உள்ளிட்ட கிடைத்த வேலையை செய்து வந்தனர். அதன்படி இருவரும் இன்று காலை சமையல் வேலைக்காக சைக்கிளில் புறப்பட்டனர்.
Advertisement

வாயலூர் அருகே இசிஆர் சாலையை கடக்க முயன்ற போது ரசாயனம் ஏற்றி கொண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே கண்ணன் துடி,துடித்து இறந்தார். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த துரையை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ரசாயன டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்து ரசாயன புகை வெளியேறியதால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிழ்ந்த சாலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement