தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பேருந்தை மதுப்போதையில் இயக்கிய ஒட்டுனரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பேருந்தை மதுப்போதையில் இயக்கிய ஒட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூச்சலிட்ட நிலையில் அரசு பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடினார். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 52 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற அரசு பேருந்தை எழிலரசன் என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் இந்த பேருந்து கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையின் மேல் ஏறி இறங்கி அதிவேகமாக சென்றதால் பீதி அடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு பேருந்து ஓட்டுநரிடம் வலியுறுத்தியும்,

பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அதிவேகமாக இயக்கியதால் பயணிகள் கூச்சலிட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அருகே ரோடுமாமந்தூர் பகுதியில் சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர் எழிலரசன் அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாற்று பேருந்து மற்றும் ஓட்டுநர் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பேருந்தின் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related News