தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் புகுந்து அடாவடி: நோயாளிகள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஜெயமணி, சரவணன், செந்தில்முருகன் ஆகிய 3 பேரும் விஜய் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.

புஸ்ஸி ஆனந்துடன் 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரண்டு 5வது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் தவெக நிர்வாகியை சந்திக்க மருத்துவமனை பொது நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கை உள்ளிட்டவற்றின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியும், கூச்சலிட்டும் அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related News