தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு சம்மன்: இன்று ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ், விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடந்த ஜூலை 3ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார்.
Advertisement

கடந்த 9ம்தேதி வரை மொத்தம் 150 பேர்களிடம் விசாரணை முடிந்தது.ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஒருநபர் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி போலீசார் மூலம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். இன்று (12ம்தேதி) முதல் விசாரணை தொடங்குகிறது. தினமும் தலா 10 பேர் வீதம் 12, 13, 16, 17ம்தேதிகளில் விசாரணை நடைபெற உள்ளதாக ஒருநபர் ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை போலீஸ் இடமாற்றம்: விஷ சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி உளவுத்துறை எஸ்ஐ பூங்குன்றம் சென்னை சிறப்பு காவல்படைக்கும் (பட்டாலியன்), கள்ளக்குறிச்சி உளவுத்துறை போலீஸ் சேட்டு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கும், தியாகதுருகம் உளவுத்துறை போலீஸ் பிரபு வரஞ்சரம் காவல்நிலையத்திற்கும்பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement

Related News