தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாபட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை ஓட்சா கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் சுகாதார ஊக்குநர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு எட்டபடாததால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதையடுத்து நிர்வாகிகளை போலீசார் வெளியேற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் சென்னை ஓட்சா கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக வெளியேற்றினர். அதனையடுத்து மற்ற நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related News