தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சித்தேரியில் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் (எ) சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 32 ஏக்கர் ஆகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரியில் மழைநீர் தேங்குகின்ற தண்ணீரை கொண்டு அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். பின்னர் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் சித்தேரியின் சுற்றுபுறம் பகுதியில் குடியிருப்பு வீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.

Advertisement

இதனால் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து வாய்க்கால் தூர்ந்துபோனது. மேலும் மழை நீர் சேகரித்து வந்த ஏரியானது தற்போது கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளின் கழிவு நீர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் சித்தேரியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.

ஏரி வடக்கு பகுதியில் குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீரில் சுமார் 2 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பல வருடங்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் தற்போது ஏரி அசுத்தமான நிலையிலும், கடந்த 3 மாதங்களாக சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தேங்கி கிடக்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் இணைந்து சித்தேரி வாய்க்கால் சீரமைக்கப்பட்டன.

மேலும் சித்தேரி மதகு பகுதியில் மண் அடைப்புகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்து நேற்று முதல் சீரான முறையில் சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

Related News