தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலிங்கராயன் பாசனப்பகுதியில் முதல் போக சாகுபடிக்கான உழவுப்பணி துவக்கம்

ஈரோடு : ஈரோடு காலிங்கராயன் பாசனத்தில், முதல் போக சாகுபடிக்கான நாற்றங்கால் விடுதல் மற்றும் உழவுப்பணி தொடங்கியுள்ளது. ஈரோடு காலிங்கராயன் வாய்கால் பாசனத்தில் கொடுமுடி வரை,18 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.பாசனப்பகுதிகளான ஆர்.என்.புதூர்,பி.பெ. அக்ரஹாரம், வைராபாளையம், சாவடிப்பாளையம்,கொடுமுடி பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கான நாற்றங்கால் விடுதல் மற்றும் உழவுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.
Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் ஆண்டு தோறும் 18 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.

வாய்க்காலை ஒட்டியுள்ள கிணற்றுப் பாசனம் மூலம் 3,000 ஏக்கர் பயன்பெறுகிறது.அதிகளவு நெல்,கரும்பு,வாழை,மஞ்சள் பயிரிடப்படுகிறது. மாமரத்துபாளையம், பி.பி.அக்ரஹாரம்,வைராபாளையம்,கருங்கல்பாளையம் பகுதிகளில் 5,000 ஏக்கர் வரை நெல் சாகுபடி அதிகளவு நடக்கிறது.

தற்போது,வயலில் தண்ணீர் தேக்கி 15 நாட்களான நிலையில் உழவுப் பணிகளை துவக்கியுள்ளோம். வைராபாளையம்,கருங்கல்பாளையம்,அக்ரஹாரம் பகுதிகளில் வாய்க்கால் வலது கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்கனவே உழவுப் பணியை முடித்துள்ளோம்.வயலை நடவுக்காக சீரமைக்க மாடுகள் மூலம் மட்டையடிக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பத்து நாட்களில் நாற்றங்காலில் நாற்றுகள் தயாரானதும்,நெல் நடவுப் பணிகளை துவங்க உள்ளோம்.இவை தவிர, பாசூர் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கருக்கு கரும்பும்,மூலக்கரை,வெண்டிபாளையம் பகுதிகளில் வாழையும் போடப்பட்டுள்ளது. மற்ற சில பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News