தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய கழுமரம் ஏறும் போட்டியில் கலக்கிய இளைஞர்கள்

Advertisement

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கழுமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சாணார்பட்டி அருகே உள்ள மடூர் கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் போட்டி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதற்காக 60 அடி உயர கழுமரம் கொண்டுவரப்பட்டு அதன் பட்டை உரிக்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தின் மீது சோற்றுக்கற்றாழை, எண்ணெய் ஆகிய வழுக்கும் திரவங்கள் பூசப்பட்டு கோயில் முன்புறமுள்ள மைதானத்தில் ஊன்றப்பட்டது. பெரிய கழுமரம் அருகே மூன்று சிறிய கழுமரங்களும் ஊன்றப்பட்டன. கழுமரம் ஏற முன்வந்தவர்கள் முதலில் சிறிய கழுமரங்களில் ஏற வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து பெரிய கழுமரத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று போட்டி தொடங்கியது. இதையடுத்து வாலிபர்கள் ஆர்வமுடன் ஒருவர் பின் ஒருவராக கழுமரத்தில் ஏறினர். இதில் பலர் மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருள் அடங்கிய முடிச்சை அவிழ்த்தார். அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் ஆர்ப்பரித்தனர்.

 

Advertisement