தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் புகார்.. ஜாமின் வழக்கில் காவல்துறை எதிர்ப்பு..!!

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001 வரை படித்த மாணவி ஒருவர் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.சக்திவேல், முன்னாள் மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து விசாரணையை மே 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Advertisement

இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படகூடிய இந்த விவகாரத்தில் மருத்துவ ரீதியாக நிரூபிக்க முடியாது என்று அவர் வாதிட்டார். மேலும், கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகியும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரிக்கவில்லை என்றும், பல மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவியை தவிர வேறு எவரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீஜித் கிருஷ்ணா ஏன் சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் சம்மன் அனுப்பி காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியத்தை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக மறு மனு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News