தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலசபாக்கம் அருகே தொடர் விடுமுறையால் 4560 அடி உயரமுள்ள பர்வதமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

*சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
Advertisement

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் தொடர் விடுமுறையால் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு தங்களது கரங்களால் பூஜை செய்து வழிபட்டனர் .கலசபாக்கம் அருகே தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வத மலைக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் வருகை தந்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். தற்போது இந்த நிலை மாறி வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களிலும் அனைத்து தினங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 21ம் தேதி ஆனி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்றும் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கொண்டு வந்த அபிஷேகப் பொருட்களை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று மல்லிகா அர்ஜுனேஸ்வரர், பிரம்மராம்பிகை அம்மனுக்கு தங்களது கரங்களால் பூஜை செய்து வழிபட்டனர்.

Advertisement

Related News