தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆயிரம் மாணவர்களுக்கு ஊக்க தொகை கல்வி உபகரணம், 20 பேருக்கு ஆட்டோ: அமைச்சர்கள் அன்பில், சேகர்பாபு வழங்கினர்

Advertisement

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “காலம் உள்ளவரை கலைஞர்”, கலைஞர் 100 உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் நடந்தன. 91வது நிகழ்ச்சியாக ‘‘உயரட்டும் திராவிடர் வேதம்-ஒலிக்கட்டும் உதயகீதம்’’ எனும் தலைப்பில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ, 1000 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்க தொகை மற்றும் உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.

விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.சந்துரு, எம்.விஜயகுமார், எஸ்.எம்.நாதன், சி.மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் ஸ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், பி.கே.மூர்த்தி கூ.பி.ஜெயின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 91வது நிகழ்ச்சியாக நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 என்றும், அவர்கள் பயன்படுத்துகின்ற கல்வி உபரணங்கள் ஒரு லேப்டாப் பேக், நோட்புக், பார்க்கர் பேனா,ஒரு தண்ணீர் பிளாஸ்க் மற்றும் ஏழ்மை நிலையில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக 20 ஆட்டோக்களை சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.

கல்வி உதவி தொகை பெற்ற மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியோடு கல்விக்கு கடவுளாக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறியிருக்கின்றனர். இளைஞர்களும், இளைஞர்களை ஊக்குவிக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பல்வேறு போட்டிகளை உலக அளவில் ஆசிய துணை கண்டத்தின் அளவில் பல்வேறு போட்டிகளை தமிழ்நாட்டிலே நடத்தி இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்கின்ற வகையில் திறம்பட செயல்படுகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், பெரும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகள் கூறினர். தொடர்ந்து மீதம் இருக்கின்ற 9 நிகழ்ச்சிகளும் இந்த மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்று முடிவு செய்து இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News