தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளச்சாராயம் ஒழிக்கும் பணி கல்வராயன்மலையில் ஏடிஜிபி திடீர் ஆய்வு: போலீசாருக்கு அதிரடி உத்தரவு

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் ஒழிக்கும் பணியை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் ஆய்வு செய்து போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Advertisement

குறிப்பாக கல்வராயன்மலையில் தனிப்படை போலீசாருடன், சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீசாரும் தீவிர மதுவிலக்கு ரெய்டு நடத்தி இதுவரை 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். கள்ளச்சாராய ஊறல்களையும் அழித்துள்ளனர். இந்நிலையில் சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் நேற்று முன்தினம் கடலூரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கடத்தல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில் நேற்று காலை கச்சிராயபாளையம் காவல் நிலையம் வந்த ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் அங்கிருந்த போலீசாரிடம் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் மதுவிலக்கு பிரிவினரின் செயல்பாடுகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கல்வராயன்மலைக்கு உட்பட்ட சேராப்பட்டு, குரும்பலூர், செருக்கலூர், ஜம்போடை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார்.

அப்போது அதிரடிப்படை மற்றும் தனிப்படை போலீசாரிடம் தயவு தாட்சண்யமின்றி கள்ளச்சாராய ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறினார். குரும்பாலூர் பகுதியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை சோதனை செய்ததை டேவிட் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்பி ரஜித் சதுர்வேதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement