தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காக்கிநாடா அருகே நள்ளிரவு கரையை கடந்தது ‘மோன்தா’- 110 கிமீ வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை

திருமலை: காக்கிநாடா அருகே நள்ளிரவு கரையை கடந்த மோன்தா புயல் கரையை கடந்தபோது 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பல ஆயிரம் ஹெக்டேரில் இருந்த பயிர்கள் சேதமாயின.வங்கக்கடலில் ஏற்பட்ட மோன்தா புயல், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா-மசூலிப்பட்டினம் இடையே நர்சிபட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. புயல் கரையை கடந்தாலும் கோணசீமா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இன்றும் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

இந்த புயலால் ஆந்திர மாநிலம் முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தது. 28,083 மின் கம்பங்களும், செல்போன் டவர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் 248 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கடலோர கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வாழை, தென்னை, மாமரங்கள் போன்றவை முறிந்து விழுந்துள்ளது. சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. அதேபோல் புயல் பாதிப்புகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News