தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் பதவி ஏற்றார்: முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்குபின் கடந்த 2021 முதல் புதுவைக்கு முழுநேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் இறுதியில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக குஜராத் அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றிய கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தடைந்த கைலாஷ்நாதன் நேற்று காலை 11.20 மணிக்கு ராஜ்நிவாசில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Advertisement

புதிய ஆளுநராக கைலாஷ்நாதன், ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை முன்பு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், மலர்மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பங்கேற்று கைலாஷ்நாதனுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Related News