தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்: போலீசுடன் வாக்குவாதம் - பரபரப்பு

Advertisement

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வன்னியர் சங்க இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாமக சார்பில் பண்ருட்டி அடுத்த கொள்ளுகாரன் குட்டை என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக பாமகவினர் அங்கு ஏற்பாடு செய்து அன்புமணி வருகைக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் அன்புமணி வருவதற்கு முன்பு காடுவெட்டி குருவின் மகனான கனல்அரசன் அந்த நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்துவதற்கு வருவதை அறிந்த பாமகவினர் கீழகொல்லை என்ற பகுதியில் கனல்அரசன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால் கனலரசனுடன் வந்தவர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினர் தலையிட்டு பாமகவினரை அனுப்பி வைத்தனர். அப்போது அன்புமணி அஞ்சலி செலுத்தியபிறகுதான் கனல்அரசன் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டுமென பாமகவினர் காவல் துறையினரிடம் முறையிட்டனர்.

அதன்பிறகு கனல்அரசனை தடுத்து நிறுத்திய போலீசார், பாமகவினர் காவல்துறை அனுமதியுடன் இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும், நீங்கள் அனுமதி பெறவில்லை என்று கூறினர். இதனால் காவல் துறையினருடன் கனல்அரசன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது காவல் துறையினர் அன்புமணி வருகை ஏற்கனவே முன்அனுமதி பெற்று நடைபெறுவதால் அவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்ட வட்டமாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல்அரசன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Advertisement