தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடமலைக்குண்டுவில் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலி அகற்றம்

வருசநாடு : கடமலைக்குண்டுவில் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் எதிரொலியால் ஈஸ்வரன் கோயில் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலி அகற்றபட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில், மூல வைகையாற்றின் கரையோரம் பாண்டியர் கால ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை செல்கிறது. இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோயிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார்.
Advertisement

இதுகுறித்து கிராம மக்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர், கோயிலுக்கு செல்லும் பாதை தனது பட்டா நிலத்தில் வருவதாகவும், அதனால் முள்வேலியை அகற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு காவல்நிலையம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் இது தொடர்பாக, கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, நேற்று கடமலைக்குண்டுவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. மேலும், பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு தேனி பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கிராம பொதுமக்களுடன் மீண்டும் ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர்கள் முஜிபுர் ரகுமான், ராஜசேகர், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோயிலுக்கு செல்லக்கூடிய முள்வேலியை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

Advertisement

Related News