தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலாடியில் தேவர் குருபூஜையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

சாயல்குடி : கடலாடியில் தேவர் குருபூஜை மற்றும் முளைப்பாரி திருவிழாவையொட்டி 10 நாள் திருவிழா நடந்தது. கடலாடி தேவர் மகாசபையின் சார்பில் ராஜராஜேஸ்வரி அம்மன் 8 ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118ம் ஆண்டு ஜெயந்தி, 63வது குருபூஜை மற்றும் 37ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது.

Advertisement

நிகழ்ச்சிகளுக்கு தேவர் மகாசபை தலைவர் ஜெகநாதன் தலைமையும், செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் செல்லப்பாண்டியன் முன்னிலையும் வகித்தனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. புதன்கிழமை கணபதிஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு ராஜேஸ்வரி அம்மன், விநாயகர், முருகன், தேவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி,சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவில் பெண்கள் கும்பி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், சிறுமிகள் கோலாட்டம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் எடுத்தும், முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினர். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

கடைசி நாளான நேற்று கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் முளைப் பாரியை எடுத்து கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடலாடி தேவர்மகாசபை மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

Advertisement

Related News