தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடலாடி அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்கள்

ராமநாதபுரம்: கடலாடி அருகே ஊரணியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கே.கருங்குளம், பூதங்குடி கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு ஊர்களின் மையப்பகுதி சாலையோரம் பெரிய ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி இப்பகுதி மக்கள் குளிப்பதற்கு, துணிகள் சலவை செய்வதற்கு, கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊரணியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் தேங்கி கிடைக்கிறது.

இந்நிலையில் ஊரணியில் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது. ஊரணியின் கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமுதாயக்கூடம், இ.சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இதன் வழியாக கடலாடி-மீனங்குடி செல்லும் சாலை உள்ளது.

இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. ஊரணியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே செத்து மிதக்கின்ற மீன்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News