தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காடையாம்பட்டி அருகே வனத்தில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து வீட்டுமனைகள்

*கிராம மக்கள் குற்றச்சாட்டு

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே, வனப்பகுதியில் உள்ள நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, வீட்டு மனைகள் அமைத்து வருவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் கிராமத்தில், குண்டுக்கல் ஏரி உள்ளது. வனப்பகுதியில் பெய்யும் மழையானது ஓமலூரான் ஓடை வழியாக குண்டுக்கல் ஏரிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, ஓடை ஓரத்தில் இருந்த பனைமரங்களை வெட்டி, வீட்டுமனைகளாக பிரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனால், 7 மீட்டர் அகலம் கொண்ட ஓமலூரான் ஓடை, தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, ஒரு மீட்டர் அகலம் மட்டும் உள்ளது.

மேலும், அப்பகுதியில் சிலர் ஓடையை தோண்டும் பணியை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து காடையாம்பட்டி தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர். குண்டுக்கல் ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையை முழுமையாக மீட்க வேண்டும்.

அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு அதிகப்படியான தண்ணீர் வனப்பகுதியில் இருந்து ஓமலூரான் ஓடை வழியாக வந்து, விவசாயத் தோட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்ற வீடியோவை ஆதாரங்களாக கொடுத்து புகார் அளித்துள்ளனர்.

மேலும், வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு, நீர்வழிப் பாதையை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Related News