தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கச்சிராயபாளையம் கோமுகி அணை அருகே ரூ.5 கோடியில் புதிய மீன் விதைப் பண்ணை

*எம்எல்ஏ, ஆட்சியர் துவக்கி வைத்தனர்

சின்னசேலம் : கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு மீன் விதைப்பண்ணையை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து ஆட்சியர் பிரசாந்த், உதயசூரியன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: மீன் விதைப் பண்ணையில் மீன் குஞ்சு நாற்றங்கால் தொட்டி, மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டி, மீன் குஞ்சு நிலைப்படுத்துதல் மற்றும் சிப்பம் கட்டும் அறை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, உட்புற சாலை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பண்ணை மூலம் மீன் வளம் பெருகுவதுடன் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பொருளாதாரம் உயரும். இப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச்சத்துள்ள மீன்களை உண்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், சின்னசேலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அன்புமணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் தண்டபாணி, செயல் அலுவலர் விழிச்செல்வன், கவுன்சிலர் பழனி, மம்முபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.