தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

ஊட்டி : ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நீலகிாி மாவட்டம், ஊட்டி எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகிறோம். குடிநீர் வழங்க கூடிய ஆதாரமான கிணறு தூர்வாரப்படாமல் உள்ளது. நீர்த்தேக்க தொட்டி தரைதளம் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

இதனால் குடிருக்காக கடும் சிரமப்பட்டு வருகிறோம். கழிவுநீர் செல்ல ேபாதிய கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். குடிநீர் ஆதாரமான கிணற்றை தூர்வார வேண்டும். கழிவுநீர் சீராக செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement