தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நடவடிக்கை தொடக்கம் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் விசாரணை குழு அமைப்பு: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், முறையற்ற நடத்தையால் நீதித்துறைக்கு களங்கம் விளைவித்த யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் பலர் முன்மொழிவை வழங்கினர். இதன் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, எம்பிக்களின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை நேற்று தொடங்கினார்.

அவையில் அவர் கூறுகையில், ‘‘நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி ரவிசங்கர் பிரசாத், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட முன்மொழிவு ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968, பிரிவு 3(2)ன்படி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது விரைவில் விசாரணை அறிக்கையை வழங்கும். அதுவரையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும். மேலும், ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என்பதை நாட்டின் மக்களுக்கு உரத்த குரலில் மக்களவையில் இருந்து பதிவு செய்கிறோம்’’ என்றார்.