தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி சந்துரு அறிக்கையை நிராகரிக்க கூக்குரலிடுவது வேடிக்கையாக உள்ளது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகளில் சாதிய, மத பாகுபாடுகளைக் களையும் வகையில் நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்திருக்கிறது. இந்த பரிந்துரை ஏதோ சாதிய மற்றும் மதத்துக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயல்கின்றனர்.
Advertisement

நீதிபதி சந்துரு அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு தான் எந்தப் பரிந்துரையை செயல்படுத்துவது என்பது குறித்து அரசு முடிவு செய்யும். அதற்குள் ஏதோ சாதி, மதத்துக்கு எதிராக செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

நீதிபதி சந்துருவின் பரிந்துரைகள் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது என்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் சாதிய அடையாளங்களுடன் மோதிக் கொள்வது தான் கலாசாரமா?.

எனவே, நீதிபதி சந்துரு அறிக்கையில் நிறை, குறைகள் இருக்கலாம். அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதனைத் திருத்த வேண்டும். அரசே அந்த அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்தாது. ஆய்வு செய்த பின் தான் செயல்படுத்துவார்கள். இந்தச் சூழலில் ஏதோ சாதி, மதத்துக்கு எதிராக நீதிபதி சந்துரு அறிக்கை இருப்பதாகவும், அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் கூக்குரலிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement