தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசில் 1340 ஜூனியர் இன்ஜினியர்கள் : ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு

தேர்வு: ஜூனியர் இன்ஜினியர் தேர்வு- 2025. சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
Advertisement

வயது: 01.08.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் வாட்டர் கமிஷன்/சென்ட்ரல் பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்ட் பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.

ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஸ்டாப் செலக்சன் தேர்வு 2 தாள்களை கொண்டது.

முதல் தாள் ‘அப்ஜக்டிவ் டைப்’ (கொள்குறி வகை) கேள்விகள் அடிப்படையிலும், 2ம் தாள் விரிவான விடையளிக்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.

தாள்-1 க்கான தேர்வு வருகிற அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், தாள்-2 க்கான தேர்வு ஜனவரி 2026 லும் நடைபெறும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.100/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.gov.in அல்லது www.sscsr.gov.in என்ற இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2025.

Advertisement

Related News