தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜூடோ லீக் தொடர் சென்னையில் தொடக்கம்

சென்னை: மகளிர் கேலோ இந்தியா பிரிமியர் லீக் ஜூடோ போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஜூடோ சங்கம், ஒன்றிய, மாநில மற்றும் விளையாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தும் 4வது தென் மண்டல மகளிர் கேலோ இந்தியா ஜூடோ பிரிமியர் லீக் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து சுமார் 800 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் நாளான நேற்று 12-15 வயது வரையிலான சப் ஜூனியர் பிரிவு போட்டிகள் எடை அடிப்படையில் 9 வகையாக நடந்தன. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட 144 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும் நாளையும் கேடட் ஜூனியர், சீனியர் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன.
Advertisement

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் இம்மாதம் 23ம் தேதி தொடங்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக ஜூடோ லீக் போட்டியை வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜூடோ சங்கத் தலைவர் விஜய் மோகன் முரளி, செயலர் நா. முரளி, நவீன், ஜூடோ பயிற்சியாளர் டோனி லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News