தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவது கவலையளிக்கிறது: வைகோ பேட்டி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முன்னிட்டு, அதற்கான கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள தாகயத்தில் நேற்று நடைபெற்றது. கொடியை அறிமுகப்படுத்திய வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையில் ஜன.2 முதல் 12ம்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது. இதற்கான கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

Advertisement

இந்நிகழ்வில், செல்வப்பெருந்தகை, கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் இல்லாத பிரச்னைகளை இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்துகிறது. வடநாட்டில் ராமர் கோயிலை வைத்து பாஜ எப்படி பிரச்னை செய்ததோ, அதேபோல் தமிழ்நாட்டில் சமய மோதலை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற பார்க்கிறது. மதுரை நீதிபதி இந்துத்துவாதிகளுடன் சேர்ந்து நஞ்சை வெளியே கக்குகிறார். நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவதை கண்டு கவலைப்படுகிறேன்.

Advertisement